Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Thursday, September 1, 2011

மனிதநேயம்


மனித சிற்பத்தை வடிக்கும் உளி 
கல்லாய் நின்றவனை கலையாக்கும் கருவி 
அன்பெனும் அமிழ்தை அரவணைப்பு பாத்திரத்திலிட்டு 
கையிலே நீட்டுவதல்ல கனிவோடு ஊட்டுவது 

பொருளை கொடுப்பதல்ல பொருள்பட கொடுப்பது 
கொடுப்பதும் கொள்வதும் குற்றமற்றதாய் இருப்பது 
உயர்வுதாழ்வு காட்டும் மனிததராசின் மனமுள் 
மனிதநேயத்தை நோக்கி என்றும் நிற்பதில்லை 

மனிதமனம் தேடுவது உதவியை மட்டுமல்ல 
உதவும் கரங்களின் பரிவெனும் ஸ்பரிசமும்தான்
உணவை மட்டும் கொடுப்பது மனிதம் 
அருகிருந்து உண்ண செய்வது மனிதநேயம் 

தனித் தூண்களாய் தவித்து நிற்ப்பதைவிட  
மனிதநேயம் எனும் கூரையால் பிணைக்கப்பட்டு 
மண்டபமாய் மணி கோபுரமாய் வாழ்ந்து 
மனிதம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம்!! 

Wednesday, August 31, 2011

அன்னையே!


பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தாய் 
பட்ட வலிகளுக்கு பரிதவிக்கவில்லை நீ 
நானும் சுமக்கிறேன் சேயாய் உன்னை 
மனதிலும் நிஜத்திலும்  வலிகள் தெரிவதில்லை  
நீ இருந்தாய் வலிகளின் மருந்தாய்
அன்னையின் அன்பு ஆண்டவனிடத்தும் வராது
உள்ளத்தே வைத்து உன்னையும் வணங்குகிறேன்

  

Tuesday, February 22, 2011

Lonely

No one with me,
No one around me,
No one look at me,
No one get my happy,
No one share my sorrow,
No one even touch me,
I am in love.
So, I am in love.

Lonely I said myself,
Love is god and
He is with me!

Sunday, February 20, 2011

My first english poem

Dream like a stream
Passes in fraction,
It makes a storm,
In our motivation.