Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Wednesday, August 31, 2011

அன்னையே!


பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தாய் 
பட்ட வலிகளுக்கு பரிதவிக்கவில்லை நீ 
நானும் சுமக்கிறேன் சேயாய் உன்னை 
மனதிலும் நிஜத்திலும்  வலிகள் தெரிவதில்லை  
நீ இருந்தாய் வலிகளின் மருந்தாய்
அன்னையின் அன்பு ஆண்டவனிடத்தும் வராது
உள்ளத்தே வைத்து உன்னையும் வணங்குகிறேன்

  

Monday, February 14, 2011

முதல் கவிதை - வலை பதிப்பில்

இது புதிது, புத்தம் புதிது
நித்தம் எந்தன் நினைவுகள் கொண்டு
இதமாய் செய்த இதய செண்டு

கருத்துகள் நிறைந்த பெட்டகமாய்
கவித்துவம் மிகுந்த கற்பகமாய்
கலந்து புனைந்த ஊடகமாய்

சிந்தனை வித்துக்கள்
சின்னஞ்சிறு முத்துக்கள்
சிற்சில காணுங்கள்

உங்கள்
வாசல்    
வரும்...