Thursday, September 1, 2011

மனிதநேயம்


மனித சிற்பத்தை வடிக்கும் உளி 
கல்லாய் நின்றவனை கலையாக்கும் கருவி 
அன்பெனும் அமிழ்தை அரவணைப்பு பாத்திரத்திலிட்டு 
கையிலே நீட்டுவதல்ல கனிவோடு ஊட்டுவது 

பொருளை கொடுப்பதல்ல பொருள்பட கொடுப்பது 
கொடுப்பதும் கொள்வதும் குற்றமற்றதாய் இருப்பது 
உயர்வுதாழ்வு காட்டும் மனிததராசின் மனமுள் 
மனிதநேயத்தை நோக்கி என்றும் நிற்பதில்லை 

மனிதமனம் தேடுவது உதவியை மட்டுமல்ல 
உதவும் கரங்களின் பரிவெனும் ஸ்பரிசமும்தான்
உணவை மட்டும் கொடுப்பது மனிதம் 
அருகிருந்து உண்ண செய்வது மனிதநேயம் 

தனித் தூண்களாய் தவித்து நிற்ப்பதைவிட  
மனிதநேயம் எனும் கூரையால் பிணைக்கப்பட்டு 
மண்டபமாய் மணி கோபுரமாய் வாழ்ந்து 
மனிதம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம்!! 

No comments:

Post a Comment